Wednesday, September 25, 2013

நட்பு......

அறியாத வயதினில் அவன் எறிந்த கல்லின்
கரையாத காய தழும்பு நட்பு.....
அரைக்கால் டிராயரை அவிழ்த்து விளையாட்டு காட்டினாலும்
அழும் நீரினில் முகம் சுருங்குவதும்
கரை ஏறி கண்மாய் ஏறி நுரை பொங்க நீச்சலடித்ததும்
மழையின் கூதல் போக்க மண் பூசி விட்டதும்
பட்டாசு வெடிக்க காசில்லாத பொழுதுகளில் பாலிதின் பைகளிலே தீபாவளி காட்டியதும் நட்பு.....
தோற்றுப்போன தேர்வுகளின் முடிவுகளை நீர்த்து போக செய்யும் நீயும் என் பக்கம் தான் நிற்கிறாய் என்ற எண்ணம்...
படிப்பதற்காக கூடிய பல இரவுகளில் நாம் படக்கதைகள் பேசியது தான் அதிகம்....
எவனோ ஒருவன் மணக்கும் பெண்ணிற்காக
என் நண்பனுடன் சேர்ந்து நானும் வாங்கிய அடி இன்னும் சிரிக்க வைக்கிறது என் இதழ்களை.......
பார்த்த பொழுதுகளில் எல்லாம் பரவசமாக
பாட்டில்களை தேர்ந்து எடுத்தாலும் என் பாதி நோயையையும்  பகிர்ந்து கொண்டவன் என் நண்பன் ......
சில நேரங்களில் சிரிக்க விட்டு, பல நேரங்களில் அழ வைக்கும் காதல் நோய்க்கான கடவுளின் மருந்து நட்பு...
எதற்காக பேசுகின்றான் என்ற எண்ணம் துளியும் எழாமல்
எனக்காக நீ ஆட்டிய தலை அதன் பெருமை சொல்லும்....
திருமண சந்தையில் எடை போகும் நாட்களிலும்
விடை பெற போகும் வேதனை நொடிகளிலும்
விளையாட்டாய் எனை பார்த்து நீ உரைப்பாய் .
"விடுடா எல்லாமே வாழ்க்கைல வர தானே செய்யும்"....
சொட்டு சொட்டாய் சேர்த்து வைத்த நட்புதனை
பட்டு நூல் முள்ளாய் கிழித்து எரிந்தது காலம்...
எட்டு வைத்து நாம் முன்னேறும் எல்லா பொழுதுகளிலும்
விட்டு விட்டே செல்கின்றோம் சில நட்புகளை....
உன் துக்கத்தினை உறவுகள் இரு மடங்காக்கும்....
உன் மனைவியின் உடல் நலம் உன்னை யோசிக்க வைக்கும்...
தள்ளாத வயதினில் தாய் தந்தையிடமும் பகிர முடியாமல் நிற்கையிலே தோளுக்கு பின் கேட்கும் ஒரு குரல் உன் உயிர் காக்கும்
"என்ன ஆச்சு மாப்ள?"...........
உதிரத்தில் உறவு கொண்டாட முடியாத இந்த அதிசயத்தை
சேர்த்து வைக்கும் தெருமுனை தேநீர் கடைகளுக்கு நன்றி........



No comments:

Post a Comment